sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்

/

இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்

இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்

இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : மார் 21, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கிளை சார்பாக, இடையகோட்டைக்கு மினி பஸ் இயக்கப்பட வேண்டும்.

அரவக்குறிச்சியில் இருந்து, இடையகோட்டை வரை மொண்டியூத்தாங்கரை, தண்ணீர்பந்தல், குமாரபாளையம், வெங்கடாபுரம், பாறையூர் வழியாக மினி பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் இப்பகுதி கிராமங்கள், போக்குவரத்து வசதியின்றி உள்ளது. இப்பகுதியில் இருந்து கட்டட தொழிலாளர்கள், பெயின்ட் அடிப்போர், கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வரும் முதியவர்கள் என பலரும், மூன்று கி.மீ., துாரம் நடந்து, மெயின் ரோடு பகுதிக்கு வந்து, பஸ் ஏற வேண்டிய சிரமமான சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் சிரமம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அரவக்குறிச்சியில் இருந்து, இடையகோட்டை வரை, அரவக்குறிச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கிளை மூலமாக, பொதுமக்கள் நலன் கருதி, மினி பஸ்கள் இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us