/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் மருத்துவமனை டாக்டர் மாரடைப்பால் சாவு
/
தனியார் மருத்துவமனை டாக்டர் மாரடைப்பால் சாவு
ADDED : செப் 16, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 31, டாக்டர். இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த, 12ம் தேதி இரவு, பணியில் இருந்த அவர், தன் அறையில் படுத்திருந்தார்.
மறுநாள் பணிக்கு வந்த மற்றொரு டாக்டரான சுரேஷ் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது டாக்டர் விக்னேஷ் இறந்து கிடந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

