கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கைப் பற்றிய அனுபவ மொழிகள்!

17-அக்-2024

கவிஞரும், பாடலாசிரியருமான கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார்.

17-அக்-2024

இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம்... அவரின் வாழ்க்கை பற்றிய அனுபவ மொழிகள் இதோ...

17-அக்-2024

வியர்வை துளிகளும், கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால் அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

17-அக்-2024

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டும்.

17-அக்-2024

நடப்பது நடக்கட்டும்; நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துவிடு. நிம்மதியான தூக்கம் வரும்.

17-அக்-2024

அழும்போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள். தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

17-அக்-2024

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனைகள் இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.

17-அக்-2024

காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கேதான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கும்.

17-அக்-2024

தேவைக்கு மேலே பொருளும் திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

17-அக்-2024

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.

17-அக்-2024

உனக்கு இவ்வுலகம் சொந்தமில்லை, இவ்வுலகத்திற்கு நீதான் சொந்தம்.

17-அக்-2024