டாப் -அப் கடன் வசதியை எப்போது நாடலாம்?

23-ஏப்-2024

தவணையை முறையாக செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள், வீட்டுக் கடன் மீது டாப்- அப் கடன் வசதியை அளிப்பதுண்டு. இவை கூடுதல் கடன் தொகையாக கருதப்படுகின்றன.

23-ஏப்-2024

மூலக் கடனின் வட்டி அடிப்படையில் இதற்கான வட்டி விகிதம் அமையும். ஒரு சில வங்கிகள் கூடுதலாகவும் வட்டி வசூலிக்கலாம். இதற்கான காலம், கடன் காலத்திற்கு உட்பட்டு அமையும்.

23-ஏப்-2024

டாப் -அப் கடன் என்பது வீட்டுக்கடன் மீதானது என்பதால் ஈட்டுறுதி இல்லாத கடன். வாடிக்கையாளர் கடன் வரலாறுக்கு ஏற்ப வங்கிகள் தீர்மானிப்பதால் எளிதாக கிடைக்கும் வசதி.

23-ஏப்-2024

மேலும், ஏற்கனவே ஆவணங்களை சமர்ப்பித்து கடனுக்கான செயல்முறைகளை நிறைவேற்றியுள்ளதால், டாப்- அப் கடன் பெறும் போது புதிதாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

23-ஏப்-2024

இதை தனிநபர் கடன் போல கருதலாம். இந்த தொகையை குறிப்பிட்ட நோக்கத்திற்காக தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாடிக்கையாளர் விரும்பிய வழியில் பயன்படுத்தலாம்.

23-ஏப்-2024

வீடு பராமரிப்பு, மேம்பாடு அல்லது இதர செலவுகளுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம். வீடு பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், அந்த தொகைக்கு வருமான வரி சலுகையும் கோர முடியும்.

23-ஏப்-2024

எனினும், இந்த வசதியை பயன்படுத்துவதில் கவனம் தேவை. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக, கடன் பெற்று வாழ்வியல் சார்ந்த செலவுகளில் ஈடுபடுவது கடன் சுமையை உண்டாக்கலாம்.

23-ஏப்-2024

அவசர தேவை காலத்தில், தனிநபர் கடன் போன்றவற்றை விட சாதகமானது எனத் தெரிந்தால் இந்த கடனை நாடலாம். ஆனால், கடன் தொகையை திரும்பச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

23-ஏப்-2024

தனிநபர் கடனோடு ஒப்பிடும் போது, இந்த கடனை திரும்பச் செலுத்த அதிக காலமாகும் என்பதால், வட்டி குறைவு என்றாலும், ஆண்டு கணக்கில் மொத்தமாக செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும்.

23-ஏப்-2024

எனவே, இந்த கடனை முன்கூட்டியே அடைக்க முயல்வது நல்லது. கடன் பெறுபவர் நிதி சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

23-ஏப்-2024