வீட்டின் வெளியே இருந்து நம்பிக்கை: இன்று உலக அகதிகள் தினம்

20-ஜூன்-2024

உலகில் 6 கோடி பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். நிமிடத்துக்கு 20 பேர் வீட்டை விட்டு வெளியேறி மற்ற பகுதி, நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

20-ஜூன்-2024

86 சதவீத அகதிகள் வளரும் நாடுகளில் உள்ளனர். உலகின் பெரிய அகதிகள் முகாம் (3.29 லட்சம் பேர்) கென்யாவின் ததாப் நகரில் உள்ளது.

20-ஜூன்-2024

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர்.

20-ஜூன்-2024

இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

20-ஜூன்-2024

இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

20-ஜூன்-2024

இந்த ஆண்டு தீம் "அனைவரும் வரவேற்கிறோம்." அகதிகளை ஆதரிப்பதில் உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

20-ஜூன்-2024