கடலுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED :10 hours ago
கடலுார்: கடலுார், வில்வராயநத்தம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் வில்வராயநத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உளள்து. இக்கோவில் தீமிதி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை அரவாண் புறப்பாடு, மகாபாரத சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது. மதியம் ஹோமம் மற்றும் அக்னி ஸ்தாபிதம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் கோவில் முன்பு நடந்த தீமிதி விழாவில் பொதுமக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.