பாலகிருஷ்ணா படத்தில் இருந்து வெளியேறிய நயன்தாரா.. இணைந்த காஜல் அகர்வால்!
ADDED : 13 hours ago
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111வது படத்தை கோபிசந்த் மல்லேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரிந்தி சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது முதலில் வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகுவதாக அறிவித்தனர். அதன் பின்னர் அதிக பொருட்செலவால் இந்த படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்திருந்தனர். ஆனால், நயன்தாராவின் அதிக சம்பளத்தால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக இப்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால் இணைந்து 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.