உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி

ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று முன்தினம் காலமானார். சென்னைக்கு நேற்று அவர் உடல் கொண்டு வரப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று தவெக தலைவர் விஜய், திமுக.,வின் உதயநிதி, நடிகர்கள் தனுஷ், கார்த்தி, சிம்பு, விஷால் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை ரஜினிகாந்த், சிம்ரன், ரவி மோகன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அவர் குடும்ப முறைப்படி இறுதிச் சடங்கு நண்பகல்12 மணியளவில் துவங்கியது. அவர்கள் வழக்கப்படி வாகனத்தில் அவர் உடல் கொண்டு செல்லப்படவில்லை. தோளில் சுமந்தபடி சென்னை மயிலாப்பூர், கைலாச அருகில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது வாரிசுகளான ஜித்தன் ரமேஷ், ஜீவா உள்ளிட்டோர் இறுதிச் சடங்கு பணியை செய்தனர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்குனர்கள் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார், லிங்குசாமி போன்றவர்கள் நேற்று முதல் சவுத்ரி வீட்டில் இருந்தனர். அவரால் படம் பெற்ற பல்வேறு நடிகர்கள் ஊழியர்களும் அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக மன்சூர் அலிகான், கனல் கண்ணன், ரஹ்மான், சிம்ரன், ராகவா லாரன்ஸ், உதய், தயாரிப்பாளர் முருகராஜ், பேரரசு, மேஜர் ரவி, மாணிக்கம் நாராயணன், நாகா அசோக், ஸ்டன்ட் சில்வா, ஷோபி லலிதா, இயக்குனர் பாலகிருஷ்ணன், ரவி மோகன், தமீம் அன்சாரி, திருப்பூர் சுப்ரமணியம், அமீர், பழம்பெரும் நடிகை ஜெயபாரதி, மலையாள நடிகர் மம்முட்டி, சூரி, சந்தானம், சிபிராஜ், ஆனந்த்ராஜ், பார்த்திபன், நாம் தமிழர் கட்சியின் சீமான், மீனா, உள்ளிட்ட பல திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !