உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக போலீசாக நடித்துள்ள சசிகுமார், அரசியல் குறித்தும் பேச்சு

முதன்முறையாக போலீசாக நடித்துள்ள சசிகுமார், அரசியல் குறித்தும் பேச்சு

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‛வதந்தி 2' வெப் சீரிஸ் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகிறது. புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர். இது குறித்து பேசிய சசிகுமார், ‛‛நான் முப்பதுக்கு அதிகமான படங்கள் நடித்து விட்டேன். மதுரைக்காரனாக பல படங்களில் நடித்துள்ளேன். எனக்கு தாதா ரவுடி வேடங்களில் அந்த பின்னணியில் அதிகம் கதைகள் வருகின்றன.

முதன்முறையாக இந்த படத்தில் போலீசாக நடித்துள்ளேன். அதிலும் ஒரு நிரபராதியை காப்பாற்றும் அவருக்கு உதவும் முக்கியமான கேரக்டர். போலீசாக இருந்தாலும் நீண்ட தாடி வைத்து நடித்துள்ளேன். அது ஏன் என்பது வெப் சீரிஸில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

நடிப்பது மட்டுமே என் வேலை அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. வெப்சீரிஸில் நடிப்பது என்பது வேலை அதிகமாக இருக்கிறது. 5 மணி நேரத்துக்கும் மேலாக வெப் சீரிஸ் ஓடுவதால் அதற்கு தக்கபடி படப்பிடிப்பு நடத்த வேண்டி உள்ளது. இந்த கேரக்டரை தொடர்ந்து எனக்கு நிறைய போலீஸ் வேடங்கள் வரும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !