குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி
ADDED :82 days ago
சோழவந்தான்; குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மே 24 முதல் கால லட்சார்ச்சனையுடன் விழா தொடங்கியது. நேற்று மே 26 காலை 9:00 மணி வரை 5 கால லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து புண்யகாவாசனம், சாத்துமுறை கோஷ்டி, யாகசாலை ஆரம்பம், மஹா சங்கல்பம்,யாகம், கடம்புறப்பாடு நடந்து 11:08 மணிக்கு குருபகவானுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மஹா ஆரத்தி நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. ஆர்.டி.ஓ, கருணாகரன், துணைத் தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி, பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.