அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை
ADDED :7 hours ago
கோவை ; வைகாசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.