பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு 16 வகை அபிஷேகம்
ADDED :3 hours ago
பேரூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் கேதாரீஸ்வரர் திருவீதியுலா நடந்தது. திருவிழாவின், ஒன்பதாம் நாளில், நாற்று நடவு உற்சவம் நடந்தது. பத்தாம் நாளான இன்று காலை, 10:00 மணிக்கு, நடராஜப்பெருமான், சிவகாமி தாயார், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, பால், தயிர், நெய், விபூதி, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதன்பின், நடராஜப்பெருமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சியளித்தார். இன்று ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா நிறைவடைந்தது.