உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோவிலில் ஆனி பிரம்மோற்சவ முன்னிட்டு தங்க கொடி மரத்தில் சிவாச்சாரிகள் கொடியேற்றினர். கொடியேற்றத்தில் தங்க கொடிமரத்து முன் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் இன்று தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற சிறப்பாக துவங்கியது. முன்னதாக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கொடிமரம் முன் எழுந்தருளி காட்சி தந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, மாலை அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !