மகா வாராஹி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
ADDED :3 hours ago
வேடசந்துார்; வேடசந்துார் கோகுல் நகர் மகா வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, மங்கை மாகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி ஏராளமான பெண்கள் பால்குடத்தை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.