சிங்கம்புணரி: ஆஷாட நவராத்திரி திருவிழா
ADDED :1 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அன்னை மகாமுத்து வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி திருவிழா ஜூலை 13 ல் தொடங்கியது.
10 நாள் திருவிழாவாக தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிக்கிறார். நேற்று ஐந்தாம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.