உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி: வரும் 29ல் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் துவக்கம்

திருவண்ணாமலை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி: வரும் 29ல் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் துவக்கம்

திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தாார். அவருக்கு சிறப்பு வரவேற்பு மரியாதை அளிக்ப்பட்டது. 


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் உலக நன்மைக்காக நடந்த சண்டி ஹோமத்தில்  காஞ்சி காமகோடி பீடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுடன் பங்கேற்று வழிபாடு செய்தார். மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ வழிபட்ட சுவாமிகள் தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


சாதுர் மாஸ்யம் விரதம்: துவக்கம் ஹிந்து சமயத்தில் துறவிகள் ஆடி மாதம் பௌர்ணமி முதல் கார்த்திகை மாதம் பௌர்ணமி வரை சாதூர் மாஸ்யம் விரதம் கடைபிடிப்பார்.  இந்த நான்கு மாதங்களும் ஒரே இடத்தில் தங்கி வேத வேதாந்தங்களை பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வர். உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர். ஸ்ரீ காஞ்சி  காமகோடி பீடம் ஆச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பிடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் ஓரிக்கையில் சாதுர் மாஸ்யம் விரதம் வரும் 29ம் தேதி முதல் துவங்குகின்றனர்.  29ம் தேதி கடக மாதத்தின் 13வது நாள், புதன்கிழமை, வியாச பூஜையுடன் தொடங்கி, கன்யா மாதத்தின் 10வது நாள், சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2026 அன்று விஸ்வரூப யாத்திரையுடன் இந்த சாதுர் மாஸ்யம் விரதம் முடிவடைகிறது. சாதுர்மாஸ்யத்தின் போது விஷேச பூஜைகள், ஆன்மிகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். 69வது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் 92வது அவதார தின உற்சவம் கடக மாத ஸ்ராவிஷ்ட நட்சத்திரமான 15ம் தேதி (வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2026) சிறப்பு பூஜை, ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் போன்றவற்றுடன் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !