சுப்ரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி விளக்கு பூஜை
ADDED :5 days ago
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கும்,கஜலட்சுமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கஜலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மழை வேண்டி விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.