உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் செப்.,5ல் சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிள்ளையார்பட்டியில் செப்.,5ல் சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா செப்., 5 அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பிள்ளையர்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருவிழா செப்., 5ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 8:30 மணிக்கு மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருவார். செப்., 6 முதல் தினமும் காலையில் விநாயகர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா வருகிறார். சதுர்த்தி விழாவை முன்னிட்டு தினமும் இரவு 8:30 மணிக்கு விநாயகர் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை வாகனங்களில் திருவீதி உலா வருவார். செப்., 10 அன்று மாலை 5:00 மணிக்கு கோயில் முன் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும்.

செப்., 13 ல் சதுர்த்தி தேரோட்டம் செப்., 13 அன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வார். அன்று மாலையில் தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4:30 மு தல் இரவு 10:00 மணி வரை மூலவரான விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். செப்., 14 அன்று காலை 11:00 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அதனை தொடர்ந்து விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படையலிட்டு வழிபடுவர்.

சதுர்த்தியன்று தமிழக அளவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா. கண்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !