மேல்மலையனுாரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
ADDED :9 hours ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் பஸ் நிலையம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வசந்த மகோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் பிற்பகல் 2;30 மணிக்கு மகாபாரத சொற்பொழிவும், இரவில் தெருக்கூத்தும் நடந்தது. 24வது நாளான நேற்று முன்தினம் கோவில் திடலில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதி விழாவும் நடந்தது. நேற்று தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது.