உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை

மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில், பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வில்லன் (?) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலரில் அவர் ஒரு சில 'பிரேம்கள்' மட்டுமே வந்தார். இருந்தாலும் நேற்று நடைபெற்ற முன் வெளியீட்டு விழாவில் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பார்த்திபன், “நான் பார்த்திபன்… ராதா கிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன், ஆமாம் நாயுடு பையன். ஆனால், நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தெலுங்கை விட தமிழ் நன்றாக பேசுவேன். இந்தப் படம் வெளிவந்த பிறகு இதன் வெற்றி விழாவில் நிச்சயம் தெலுங்கில் பூர்த்தியாகப் பேசுவேன் என இந்த மூர்த்தி சொல்கிறேன். மூர்த்தி என்பது எனது ஒரிஜனல் பெயர்,” என்றார்.

வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த பலர் இருக்கிறார்கள். அதேசமயம், அவர்களது தாய் மொழியில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்களது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவதில் மகிழ்கிறார்கள். அப்படித்தான் பார்த்திபனும் மகிழ்ந்து பேசியுள்ளார். அதில் தனது சாதியையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பார்த்திபனின் குருநாதரான பாக்யராஜ், சாதிப் பெருமையைப் பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பார்த்திபனின் பேச்சும் இப்போது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.

சமீபத்தில் த்ரிஷா பற்றி அவர் பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார் பார்த்திபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Mani . V, Singapore
2026-03-18 05:53:59

இவனையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? இவன் ஏன் கடந்த வாரம் விஜய், திரிஷா பற்றியெல்லாம் பேசினான் என்று இப்பொழுது தெளிவாகப் புரிந்து விட்டது.


angbu ganesh, chennai
2026-03-17 10:10:17

எல்லாருமே எங்களை ஏமாத்தி பிழைக்கும் ..... ஏன் இதை எல்லாம் நீ சினிமாக்கு வந்த ஒடனே சொல்லல, பயம் ஆனா நாங்க அதெல்லாம் பாக்கறது இல்ல, ரஜினி தைரியமா கர்நாடக்க ஆளுன்னு சொல்லித்தந்த வந்தார் ஆக எங்கள் தமிழ் நாட்டில வந்துதாண்டா எல்லாருமே பிழைக்கறீங்க ஆனா நாங்க இன்னும் எங்களையும் சும்மா சொல்ல கூடாது உங்களை வாழவச்சிட்டு நாங்க சோம்பபேரிங்களா வீட்டுல சும்மா வக்கார்ந்து இருப்போம்