விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா
விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன் போன்ற படங்களில் நடித்தவர் கவுசல்யா. சமீபகாலமாக கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், தற்போது செல்வராகவன் நடித்திருக்கும் மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தில் அவரது அக்கா வேடத்தில் நடித்திருக்கிறார். கவுசல்யா அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் குறித்து கூறும் போது, நான் டூயட் பாடிய ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். அவருடன் இணைந்து நடிக்கும்போது நல்ல நண்பராக இருந்தார். இயக்குனர்கள் எப்படி நடிக்கச் சொன்னாலும் அப்படி நடித்துக் கொடுப்பார். இப்படித்தான் நடிப்பேன் என்று தன்னுடைய கருத்தை திணிக்க மாட்டார். அப்படிப்பட்டவர் தற்போது அரசியலுக்கு சென்றுள்ளார். மக்களுக்கு அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்வார். அவருக்கு இருக்கிற ரசிகர் கூட்டத்தை பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.