ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்?
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த அவரின் 173வது படத்தை இயக்க முதலில் சுந்தர்.சி ஒப்பந்தம் ஆனார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள், சில பிரச்னைகள் காரணமாக அவர் விலகினார். ஆனால், அவரோ அடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் ரஜினி படத்தை இயக்க முடியவில்லை என்றார்.
அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆனார். 2வது படமே, ரஜினி படமா என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அவரும் அந்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பானார். சில மாதங்களில் அந்த படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகப்போகிறார். ஏற்கனவே ரஜினிக்கு கதை சொல்லி அசத்திய அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போகிறார்.
இதற்கு காரணம், சிபி சக்ரவர்த்தியின் முந்தைய கமிட்மென்ட். அவர் ஒரு தெலுங்கு படம் இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். அந்த படத்தை விட்டுதான் ரஜினி படத்துக்கு வந்தார். அந்த நிறுவனம் செக் வைக்க, அட்வான்ஸ் மற்றும் அந்த படத்துக்கான செலவுகளை திருப்பி கேட்க, வேறு வழியின்றி ரஜினி படத்தை விட்டு, அந்த நிறுவனத்துக்கே படம் பண்ணப்போகிறார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இது குறித்த சிபி சக்ரவர்த்தியோ, கமல் நிறுவனமோ எதுவும் சொல்லவில்லை. ஆனால், விரைவில் இயக்குனர் மாற வாய்ப்பு. சுந்தர்.சிக்குபின், சிபியும் மாறப்போகிறார். என்ன நடக்குது என தெரியவில்லை என புலம்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோ படத்தை அஸ்வத் மாரிமுத்து மாதிரியான இயக்குனர்கள் இயக்கினால் எப்படி இருக்கும்? அஸ்வத் படத்தில் இளமை, போதை, கிண்டல், பெண்களை வம்பு இழுக்கும் சமாச்சாரங்கள் அதிகமாக இருக்கும். அதெல்லாம் ரஜினிக்கு செட்டாகுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.
கமலுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் ரஜினிகாந்த். அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இயக்குனர் தேர்வு, கதை தேர்வில் இவ்வளவு குழப்பங்களா? இந்த படம் எப்படி வருமோ? நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினி கொடுத்த கால்ஷீட்டை கமல் கம்பெனி சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும். அஸ்வத் மாரிமுத்து இயக்கினால் கூட, அந்த கதையை, சீன்களை கவனிக்க வேண்டும். சர்ச்சையை உருவாக்கிவிடக்கூடாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.