நான்காவது முறையாக இணையும் சித்தார்த், த்ரிஷா?
ADDED : 14 hours ago
நடிகர் சித்தார்த், நடிகை த்ரிஷா இருவரும் 20 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சித்தார்த் அதிக படங்களில் நடிக்க விரும்பாமல் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபகாலமாக த்ரிஷாவும் அப்படித்தான் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முதலில் தமிழில் ‛ஆயுத எழுத்து' என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
இதையடுத்து தெலுங்கில் ‛நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா' என்ற படத்தில் நடித்தனர். பிறகு மீண்டும் தமிழில் 2016ல் தமிழில் ‛அரண்மனை 2' படத்தில் நடித்தனர். இப்போது நான்காவது முறையாக இவர்கள் தெலுங்கில் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனராம். இந்த படத்தை தெலுங்கில் தில் ராஜு தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறாராம். தற்போது இப்படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.