கேரளாவில் 'மைசா' படத்தில் ராஷ்மிகாவின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு துவக்கம்
நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பக்கம் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் இன்னொரு பக்கம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான 'கேர்ள் பிரண்ட்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் 'மைசா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை இயக்குனர் ரவீந்திரன் புல்லே என்பவர் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அதே துணிச்சல்மிக்க பெண்ணாக நடித்துள்ளார்.
இதனால் படத்தில் இவருக்கு ஆக்சன் காட்சிகள் உண்டு. தற்போது கேரளாவில் உள்ள அடர்ந்த காடு ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா நடிக்கும் ஆக்சன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்காகவே பாங்காங்கில் தினசரி எட்டு மணி நேரம் பயிற்சி எடுத்த பிறகே இப்போது படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.