உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்த ஈஸ்வரி ராவ்

பிளாஷ்பேக் : 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேர்ந்த ஈஸ்வரி ராவ்

1990ம் ஆண்டு வெளிவந்த 'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். இயற்பெயர் வைஜயந்தி. தாய் மொழி தெலுங்கு. ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள பெத்தாபுரத்தைச் சார்ந்தவர். பாலுமகேந்திராவின் “ராமன் அப்துல்லா” படத்தின் மூலம் புகழ்பெற்றார். குரு பார்வை, சிம்மராசி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அப்பு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்கள்.

தென்னிந்திய சினிமாவில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஈஸ்வராவ் 28 வருட இடைவெளிக்குப்பின் 'காலா' படத்தில் ரஜனிகாந்த் மனைவியாக நடித்தார். பாலுமகேந்திரா இயக்கிய 'நீங்கள் கேட்டவை' படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க ஈஸ்வரி ராவை முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அது பல காரணங்களால் நடைபெறவில்லை.

எப்படியாவது ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பல நேர்காணல்களில் ஈஸ்வரிராவ் கூறி வந்தார். அவரது விருப்பம் 'காலா' படத்தில் மூலம் நிறைவடைந்தது. இதில் அவர் ரஜினி மனைவியாக நடித்தார். சிறந்த குணசித்ர நடிகைக்கான பல விருதுகளையும் அவருக்கு இந்த படம் பெற்றுத் தந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !