'ராமாயணா' படத்திற்கான ஊதியத்தில் யஷ் வகுத்துள்ள அட்டகாசமான திட்டம்!
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ல் திரைக்கு வந்த படம் 'டாக்சிக்'. இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபீசில் 328 கோடி வசூலித்துள்ளது. அதோடு, ஆங்கிலத்தில் இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டபோது வெறும் 1.40 லட்சம் மட்டுமே வசூலித்து படக்குழுவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் டாக்சிக் படத்தை அடுத்து ஹிந்தியில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தை நமித் மல்கோத்ராவுடன் இணைந்து தயாரித்து வில்லனாகவும் நடித்துள்ளார் யஷ். இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய லாபத்தை சம்பாதிக்க தற்போது நடிகர் யஷ் ஒரு பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. சினிமா வட்டாரத் தகவல்களின்படி, இப்படத்தின் இரண்டு பாகங்களின் தென்னிந்திய விநியோக உரிமையைப் பெற அவர் பரிசீலித்து வருகிறார்.
இது யஷிற்கு மிகவும் லாபகரமான ஒப்பந்தமாக அமையும். இந்த இரண்டு பாகங்கள் கொண்ட பிரமாண்ட காவியப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதுடன், திரையரங்குகளில் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றால், இந்த விநியோக ஒப்பந்தத்தின் மூலம் யஷ் 100 கோடிக்கும் அதிகமாகச் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக
கூறப்படுகிறது. நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ஸ்ரியா சரண், காஜல் அகர்வால் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராமாயணா படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது.