உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆணவக் கொலைக்கு கடும் தண்டனை வேண்டும் : அனு மோல்

ஆணவக் கொலைக்கு கடும் தண்டனை வேண்டும் : அனு மோல்

‛பாரிஸ் கபே' படத்தில் ஆணவ கொலைக்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டாளராக நடிகை அனு மோல் நடித்துள்ளார். படம் குறித்து அவர் கூறியது, இந்த படத்தில் இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் என் கேரக்டர் மிகவும் அழுத்தமாக இருந்தது, அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். குரு சோமசுந்தரத்துடன் இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடிக்கிறேன். படம் பார்த்த பலரும் என் நடிப்பு கேரக்டர் குறித்து பாராட்டியது மகிழ்ச்சி.

ஜாதி கொடுமை, காதல் திருமணம், ஆணவக் கொலை சட்டப் பிரச்சனை என பல விஷயங்களை இந்த கதை பேசி உள்ளது. இந்திய அளவில் ஜாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆணவ கொலை விஷயத்தில் இன்னும் கடுமையான தண்டனைகள் வேண்டுமென நினைக்கிறேன். பெண்களுக்காக, மனித உரிமைக்காக, ஜாதியை கொடுமைக்கு எதிராக போராடும் அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் எனக்கு பிடிக்கும். அடுத்து லாயர் உட்பட தமிழில் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறேன்'' என்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !