உடுமலை சபரி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு
ADDED :42 days ago
உடுமலை; எஸ்.வி.புரம் ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் 48வது நாள் மண்டல பூஜை நிறைவடைந்தது.
உடுமலை; எஸ்.வி.புரம் ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் 48வது நாள் மண்டல பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.