தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கணித்த பஞ்சாங்கம்: எதிர்கட்சியினர் பற்றிய கணிப்பும் நடந்தது
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 72 ஆண்டுகளுக்கு பின் தற்போது முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இது குறித்து பராபவ வருட 2026–2027, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளதாவது: பக்கம் 3ல், வருஷ பலன்கள் பகுதியில், 13வது வரியில், தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். கடைசி 22வது வரிசையில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13ம் பக்கத்தில் கடைசி 2 வரிகளில் , நடிப்பு துறையில் உள்ள நடிகருக்கு அரசியல் செல்வாக்கு உயரும், எதிர் கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்க கணிப்பு படி நடிகர் விஜய் முதல்வராகி விட்டார், ராஜயோகம் பெற்ற எதிர்கட்சியினர் சிலர் அமைச்சர்களாக பதவி யேற்றுள்ளனர்.