பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று துவக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்று நாள் தேரோட்டம் இன்று துவங்குகிறது.
பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த, 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு, அம்மன் திருவீதி உலா; பூவோடு எடுத்தல் நடந்தது.
பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை எடுத்தும், அடி அளந்தும் வழிபாடு செய்தனர். நேற்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (28ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, 50 அடி உயரம் உள்ள அம்மன் தேர், 15 அடி உயரம் உள்ள விநாயகர் தேரும் அலங்கரித்து தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை, 29ம் தேதி மாலை, இரண்டாம் நாள் தேரோட்டம், 30ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. வரும், 31ம் தேதி மதியம், மஹா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை புரவி பாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோர் செய்து வருகின்றனர்.