உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையை காக்கும் மதுரை வீரன்; கரகம் எடுத்து பக்தர்கள் பரவசம்

கோவையை காக்கும் மதுரை வீரன்; கரகம் எடுத்து பக்தர்கள் பரவசம்

கோவை; கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீ மதுரை வீரன் கோயில் 50 ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. சுமார் 50 ஆண்டு காலத்துக்கு முன்பு இப்பகுதியில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த கோயிலின் பொன்விழா நேற்று நடந்தது. ஊர் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் விரதம் இருந்த இளைஞர்கள் சக்தி கரகம் எடுத்து சாமி ஊர்வலம் சென்றனர். அப்பகுதி பெண்கள் அவர்கள் மீது நீரூற்றி வழிபட்டனர். நாளை மஞ்சள் நீராடல், அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !