உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்ற வேளாண் அமைச்சர் வினோத்

திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்ற வேளாண் அமைச்சர் வினோத்

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட தொன்மை வாய்ந்த சைவ ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்திற்கு நேற்று கும்பகோணம் தொகுதி எம்எல்ஏவும், வேளாண்துறை அமைச்சருமான வினோத் முதன் முறையாக வந்தார். அவருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் வழிபாடு நடத்திய பின்னர் ஒடுக்கத்தில் எழுந்தருளிய ஆதீனம் 24 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அமைச்சர் வினோத்திற்கு குரு மகா சன்னிதானம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு மற்றும் அருட்பிரசாதங்களை வழங்கி விவசாயிகளுக்கு நல திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி பெருமை பெற வேண்டும் என வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !