ஆறுமுக சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு
ADDED :2 hours ago
பொதட்டூர்பேட்டை: ஆறுமுக சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடந்து வந்த மண்டல அபிஷேகம் இன்று நிறைவு பெற்றது.
பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஏப்., 30ம் தேதி கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தினசரி நடந்து வந்தது. மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான இன்று காலை, கணபதி பூஜையுடன் கலச வேள்வி நடந்தது. காலை 11:00 மணியளவில், மூலவர் மற்றும் உற்சவர் ஆறுமுக சுவாமி, விநாயகருக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மாதந்தோறும் ஆறுமுக சுவாமி மலைக்கோவிலில் கிரிவலம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.