உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில், மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோத்சவ பெருவிழா, 13 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், இன்று தொடங்கியது. காலை 9:00- மணிக்கு கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி பகவான் படம் அச்சிடப்பட்ட கொடியை வேத விற்பன்னர்கள் ஏற்றினர். தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு 8:00 மணிக்கு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். 

19ம்தேதி காலை சூரிய பிரபை உத்சவமும், இரவு சந்திர பிரபை உத்சவமும் நடக்கிறது. 20ம்தேதி காலை பூத வாகனம் உத்சவமும், இரவு ராவனேஸ்வரரர் உத்சவமும் நடக்கிறது. 20ம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும், 23ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 29ம் தேதி காலை சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரியுடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !