உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருக்கரணை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்த கும்பாபிஷேக விழா

பெருக்கரணை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்த கும்பாபிஷேக விழா

சித்தாமூர்: பெருக்கரணை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது.

சித்தாமூர் அடுத்துள்ள பெருக்கரணை கிராம மக்கள், அதே பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே முனீஸ்வரர் வழிபாடு செய்து வந்தனர்.

புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள், சில மாதங்களாக திருப்பணி மேற்கொண்டனர்.

திருப்பணி முடிந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பிரதான நிகழ்வான கு ம்பாபிஷேகம், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.

இதில், மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !