உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயிலை அகற்றாதீர் டாடாபாத் குடியிருப்போர் கூட்டுபிரார்த்தனை

விநாயகர் கோயிலை அகற்றாதீர் டாடாபாத் குடியிருப்போர் கூட்டுபிரார்த்தனை

டாடாபாத்: சிவானந்தா காலனி டாடாபாத் பழைய லே அவுட்டில் அமைந்துள்ளது பழமையான சவுபாக்ய சித்திவிநாயகர் கோயில். போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறின்றி அமைந்துள்ள இந்த கோயிலில் அன்றாடம் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இக்கோயிலை அப்புறப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது.

இம்முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் இறங்கினர்.

மஹாகணபதி ஸ்லோகம், கோளறுபதிகம், சுந்தரகாண்டம், நாமநாராயணம், ஆஞ்சநேயர் ஸ்துதி உள்ளிட்ட 18 வகையான பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.

பக்தை மஹாலட்சுமி சுப்ரமணியம் கூறுகையில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் கோயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். டாடாபாத்தில் குடியிருக்கும் மக்கள், பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். மக்கள் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்,’’ என்றார்.

சித்ரா கதிரேசன், ரமா வெங்கட், ஜானகி விஸ்வநாதன், பத்மா ராதாகிருஷ்ணன், ராணி தேவராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !