உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதி சார்பில் ஆடி அன்னதானம் துவக்கம்

பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதி சார்பில் ஆடி அன்னதானம் துவக்கம்

பாலக்காடு: டி மாத அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.


கேரள மாநிலம் பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதியின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அன்னதானம் வழங்குவது வழக்கம். நடப்பாண்டு ஒரு மாத கால அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கப்பட்டது. சமிதியின "கதளிவனம் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவை குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் ஸ்மிதேஷ் தலைமை வகித்தார். சமிதியின் நிர்வாக குழு உறுப்பினர்களான காசி விஸ்வநாதன், கோபாலகிருஷ்ணன், ஜெய் கிருஷ்ணன், ஜெகதீஷ், நந்தகுமார், மாஜி நகராட்சி கவுன்சிலர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆடி மாதத்தை முன்னிட்டு சமிதியின் சார்பில் கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு மாத கால கலை நிகழ்வுகளும் நேற்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !