குக்கே சுப்ரமணியா கோவிலில் பக்தர்கள் ஏமாற வேண்டாம்
தட்சிண கன்னடா: ‘சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோவை நம்பி பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டாம்’ என, குக்கே சுப்ரமணியா கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
‘இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதம், வீடு தேடி வருவதற்கு 751 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்’ என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வீடுகளுக்கு பிரசாதம் வினியோகிக்கும் சேவை எதுவும் நடைமுறையில் இல்லை. போலியான ஏ.ஐ., வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கோவிலின் பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்க முயல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற வீடியோக்களை நம்பி, பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டாம். கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை பக்தர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். காணிக்கை செலுத்துவோர் கோவில் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.