உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமுகை லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆவணி மாத சுவாதி வைபவம்

சிறுமுகை லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆவணி மாத சுவாதி வைபவம்

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆவணி மாத சுவாதி வைபவம் பூஜைகள் நடந்தன.


சிறுமுகை இலுப்பநத்தத்தில், லட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் பீடம் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் சுவாதி வைபவம் நடந்தது. கோவில் நடை திறந்து மூலவருக்கு, ஆவாகனம், புண்யாவஜனம், கலச ஆவாகனம் ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து திருமண தோஷ நிவர்த்தி யாகம், தொழில் அபிவிருத்தி யாகம், சகல ஐஸ்வர்ய அபிவிருத்தி மற்றும் மழை வேண்டி வர்ண ஹோமம், உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்கார பூஜையும் தீபாராதனையும் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அனந்தாழ்வார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !