திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா;தங்க கவசத்தில் சமபந்த விநாயகர்
ADDED :1 days ago
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்க கொடி மரம் அருகே உள்ள சமபந்த விநாயகர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.இதேபோல் திருவண்ணாமலை இரட்டைபிள்ளையார் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் சந்தனகாப்பு அலங்காரத்தில் இரட்டை பிள்ளையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆரணி அடுத்த நடுப்பட்டு கிராமத்தில், 51 ஆயிரம் ருத்ராட்சை மாலையில் உருவக்கப்பட்ட 10 அடி உயர விநாயகர் சிலை பக்தர்களை கவர்ந்தது.