sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.பிரபு, கள்ளிக்குடி, மதுரை.

*சாப்பிட்டதும் இலையை மூடலாமா...

சுபநிகழ்ச்சியின் போது இலையை மூடக் கூடாது. அசுப நிகழ்ச்சியில் மூடலாம்.

வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*திருநீறை எந்த திசை நோக்கி பூச வேண்டும்?

காலையில் கிழக்கு நோக்கியும் (மதியம் 12:00 மணி வரை), மற்ற நேரத்தில் வடக்கு நோக்கியும் பூச வேண்டும்.

எஸ்.வினிதா, மடிவாலா, பெங்களூரு.

*சுமங்கலி பிரார்த்தனைக்கான ஸ்லோகம் என்ன?

மங்களே மங்களா தாரே

மாங்கல்யே மங்கலப்ரதே|

மங்களார்த்தம் மங்களேசி

மாங்கல்யம் தேஹிமே சதா||

ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.

*என்றும் பதினாறு என வாழும் மார்க்கண்டேயரின் பெற்றோர் யார்?

தாயார் மருத்துவதி. தந்தையார் மிருகண்டு முனிவர்.

டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*யாருடைய கண்ணீரை பார்க்கக் கூடாது?

பிள்ளைகளின் கண்ணீரை பெற்றோர், பெற்றோரின் கண்ணீரை பிள்ளைகள் பார்க்கக் கூடாது. ஒருபோதும் இதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்.

பி.மைதிலி, ஜனக்புரி, டில்லி.

*புராணங்கள் மொத்தம் எத்தனை?

18. வியாசரால் இயற்றப்பட்ட இதை 'பதினெண் புராணங்கள்' என அழைக்கிறோம்.

எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.

*மறந்தும் பிறன்கேடு சூழற்க என்பதன் பொருள் என்ன?

மனதாலும் ஒருவருக்கு தீங்கு நினைக்க கூடாது. மீறினால் தர்மதேவதையால் தண்டிக்கப்படுவீர்கள்.

வி.ராஜன், மேலப்பாளையம், திருநெல்வேலி.

*பிறவிக் குணங்கள் எவை?

காமம், குரோதம். அதாவது ஆசை, கோபம். இவை இரண்டையும் ஒழிக்க முடியாது. குறைக்கலாம்.

கே.மணிவண்ணன், அனுப்பர்பாளையம், திருப்பூர்.

*இசையின் பெற்றோர் யார்?

ஸ்ருதியை மாதா என்றும், லயத்தை பிதா என்றும் குறிப்பிடுவர். தடுமாற்றம் இல்லாமல் ஸ்ருதி ஒலிக்க வேண்டும். தாளத்திற்கு ஏற்ப இசை செல்ல வேண்டும்.

எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.

*பெரியவர், துறவிகளை வணங்கும் போது காலை தொட்டு வணங்கலாமா?

தேவையில்லை. கை குவித்து வணங்கினால் போதும்.




    • Dinamalar Events


    Dinamalar