sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 31, 2023 10:42 AM

Google News

ADDED : ஜன 31, 2023 10:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.அர்ச்சுனன், செங்கல்பட்டு.

*வாசலில் சங்கு பதிப்பது ஏன்?

திருஷ்டியை தடுக்கும் சக்தி கொண்டது என்பதால் சங்கினை பதிக்கிறோம்.

த. நேரு, வெண்கரும்பூர், கடலுார்.

*திருமணத்தன்று அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது எதற்காக?

கற்பு நெறியுடன் வாழ்ந்து வானில் நட்சத்திரமாக திகழ்பவர்கள் அருந்ததி, வசிஷ்டர் தம்பதியினர். இவர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக.

ஜீ.நீலமேகம், உத்தமபாளையம், தேனி.

*போற்றி, சரணம், வாழ்க - இதில் எது சிறப்பானது?

வாழ்க, போற்றி, சரணம் என சிவபெருமானை பலவிதமாக போற்றுகின்றனர். மூன்றுமே சிறப்பானது.

அ.ரவீந்திரன், மணிகெட்டி பொட்டல், கன்னியாகுமரி.

*குழந்தைக்கு எத்தனை வயது வரை நெற்றியில் கறுப்பு பொட்டை வைக்கலாம்?

திருஷ்டி, கிரக தோஷத்தில் இருந்து பாதுகாக்க ஒரு வயது வரை வைப்பது அவசியம். ஆயுள் முழுவதும் பெண் குழந்தைகள் வைக்கலாம்.

அ.முரளிதரன், பெங்களுரு.

*வாசல் தெளிக்கும் போது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பது ஏன்?

கிருமி நாசினியான மஞ்சள் கலந்த நீரை தெளித்தால் நோய்கள் வராது. அதோடு மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர்.

*கோயிலில் என்னென்ன சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்?

திருமணம், நட்சத்திர பிறந்த நாளன்று ஆயுள்ேஹாமத்தை நடத்தலாம். 50, 60, 80 வயதில் நடத்தும் திருமணத்தை நடத்துவது விசஷேம்.

வி.வினித், பாபநாசம், திருநெல்வேலி.

*ஊழ்வினை உறுத்து வந்துாட்டும் என்பதன் பொருள்

நாம் முற்பிறவியில் செய்த செயல்களை ஊழ்வினை என்கிறோம். இது நம்மை விடாமல் துரத்தும். மனிதனாக மண்ணில் பிறப்பதும், ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதும் ஊழ்வினையால்தான்.

எஸ்.கஸ்துாரி, கோயம்புத்துார்.

*ஏழைகளின் கற்பக மரம் எது?

ஏழைகளின் கற்பக மரம் தென்னை. இதை வளர்ப்பவர் பணக்காரராக மாறுவார்.

எஸ்.ராஜேந்திரன், தமிழர்என்கிலேவ், டில்லி.

*கனவு தொல்லையால் சிரமப்படுகிறேன். என்ன செய்யலாம்?

நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டு தெய்வ சிந்தனையுடன் உறங்கச் செல்லுங்கள்.

எல்.கந்தரூபி, திருவேற்காடு, திருவள்ளூர்.

*லலிதா சகஸ்ர நாமத்தின் சிறப்பு என்ன?

லலிதாம்பிகையின் கருணையை விளக்கும்

நுால். பாஸ்கர ராயர் என்பவர் இதற்கு உரையெழுதி திருவாரூர் மாவட்டம் திருமீயச்சூர் கோயிலில் சமர்ப்பித்த போது, அம்பிகை தோன்றினாள். இதை படிப்பவர்கள் குறையின்றி வாழ்வர்.






      Dinamalar
      Follow us