sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 02, 2023 01:13 PM

Google News

ADDED : மே 02, 2023 01:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.மனோண்மணி, பன்னிமடை, கோயம்புத்துார்.

*அனுமன், பைரவர், வீரபத்திரருக்கு வடைமாலை சாத்துவது ஏன்?

இந்த மூவரும் ருத்ராம்ச தெய்வங்கள் அத்துடன் வேகமானவர்கள். இவர்களை குளிர்ச்சிப்படுத்தும் விதத்தில் வெண்ணெய், வடைமாலை சாத்தினால் சாந்தமாகி கேட்ட வரத்தை அளிப்பர்.

ப.ரவி, பழநி, திண்டுக்கல்.

*விருந்தினர் ஊருக்கு புறப்பட்டதும் வீட்டை கழுவலாமா?

உடனடியாக வேண்டாம். காலையில் புறப்பட்டால் மதியம் கழுவுங்கள். மாலையில் விளக்கேற்றிய பின் கழுவுவதை தவிருங்கள். சுவாமி முன் விளக்கு எரிய வேண்டிய நேரம் காலை 6:00 - 8:00, மாலை 5:30 - 7:30 மணி

எம்.கே.பிரபு, மேலகிருஷ்ணன்புதுார், கன்னியாகுமரி.

*இடவசதி இல்லாத வீட்டில் குலதெய்வம், விநாயகர் இதில் யார் படத்தை வைக்கலாம்?

இருவருமே முக்கியம். உங்கள் மனதில் இடம் இருந்தால் வீட்டிலும் இடம் கிடைக்கும்.

என்.ராமச்சந்திரன், ஆர்.கே.புரம், டில்லி.

*சந்திராஷ்டமம் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?

ஒரு நட்சத்திரத்தில் 24 மணி நேரம் சந்திராஷ்டமம் இருக்கும்.

கே.அருணாசலம், சிவாஜி நகர், பெங்களூரு.

*இல்லறத்தில் இருப்பவர்கள் தவம் செய்ய முடியுமா...

துறவியைப் போல காட்டில் தவம் செய்ய அவசியமில்லை. தான் ஒழுக்கமாக வாழ்வதோடு மற்றவர்களையும் பின்பற்றச் செய்வதே இல்லறத்தாரின் கடமை.

ஆர்.பவித்ரா, சிதம்பரம், கடலுார்.

*சுவாமிக்கு இட்ட படையலை உடனே எடுத்து சாப்பிடலாமா?

சாப்பிடக் கூடாது. பக்தர்களுக்கு கொடுத்த பின்பே சாப்பிடலாம்.

வ.கோபால், சம்சிகாபுரம், விருதுநகர்.

*சிவ வடிவங்களில் சோமாஸ்கந்தருக்கு முக்கியத்துவம் ஏன்?

சிவபெருமானின் 25 திருக்கோலங்களில் முக்கியமானது சோமாஸ்கந்தம். உண்மை(சிவம்), அறிவு(பார்வதி) இணைந்திருக்கும் போது ஆனந்தம்(முருகன்) உண்டாகும் என்பதை உணர்த்துவது இது. இவரை வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும்.

டி.சீனிவாசன், பெருங்களத்துார், செங்கல்பட்டு.

*கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு செய்வது பாவமா?

ஆம். உயிர்க்கொலை போல இவையும் பெரும் பாவங்களே.

மோ.நிர்மலா, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.

*கல்யாண வயதில் பெண் இருந்தால் சுமங்கலி பூஜையை தினமும் வீட்டில் செய்யலாமா?

வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்யுங்கள். தங்களின் நன்மைக்காக பெற்றோர் பாடுபடுகிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.






      Dinamalar
      Follow us