ADDED : மார் 15, 2019 03:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருகுலக்கல்வியை முடித்த வாசுதேவர், தன் குருநாதரான அச்சுதப்பிரேக்ஷரிடம் சந்நியாசம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். பெற்றோரின் சம்மதம் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார் குருநாதர்.
''வாசுதேவா... எங்களுக்கு நீ ஒரே பிள்ளை. அதனால் சந்நியாசத்திற்கு அனுமதியளிக்க முடியாது'' என மறுத்தனர் பெற்றோர்.
''சரி... இப்போதைக்கு நான் சந்நியாசம் ஏற்கவில்லை. ஆனால் பெருமாளின் அருளால் எனக்கு ஒரு தம்பி பிறப்பான். அப்போது சந்நியாசம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்றான் மகன்.
அந்த வாக்கின்படியே தம்பி
பிறந்த பின்னரே துறவறம் மேற்கொண்டார். இவரே பிற்காலத்தில் 'ராகவேந்திரர்' என்னும் மத்வ மதத்தில் சிறந்த மகானாக விளங்கினார்.