ADDED : ஜூன் 23, 2023 11:58 AM

* உழைப்பின் மூலம் பெறப்படும் பொருளே நிலைக்கும். அதுவே ஒருவருக்கு உயர்வைத் தரும்.
* அனைத்து உயிர்களிடத்திலும் உயர்வு, தாழ்வு கருதாதே.
* எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு.
* உலகில் அன்பு என்ற மதமும், இதயத்தின் மொழியும் மட்டுமே உள்ளது.
* கோபம், பொறாமை, ஆணவம் மிகவும் மோசமான நோய்கள். அவற்றில் இருந்து விலகியே இரு.
* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.
* கடவுளிடம் சரணடைந்துவிடு. பிறகு அவரே உன்னை வழிநடத்த ஆரம்பிப்பார்.
* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும்.
* கவலை, அவசரம், பயம், தயக்கம் போன்றவற்றால் மனம் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே.
* உனது வினைகளை கழிக்க ஒரு வழிதான் உள்ளது. அந்த வினைகளை தைரியமாக அனுபவிப்பது.
* மனதை அடக்குவது கடினம். ஆனால் அதன் தயவு இல்லாமலும் கடவுளை அறிய முடியாது.
* இன்பம், துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை.
* நோய், வறுமையில் வாடுவோருக்கு உதவினால் கடவுளின் அன்பை பெறலாம்.
* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.
என்கிறார் ஷீரடி சாய்பாபா

