sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இவருக்கு "பெரிய' தலைவலி

/

இவருக்கு "பெரிய' தலைவலி

இவருக்கு "பெரிய' தலைவலி

இவருக்கு "பெரிய' தலைவலி


ADDED : ஜூலை 09, 2012 10:30 AM

Google News

ADDED : ஜூலை 09, 2012 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருவிக்குப் பெயர் பெற்ற குற்றாலத்தில் வீற்றிருப்பவர் குற்றாலநாதர். இங்குள்ள அருவியை சித்திரகங்கை என்பர். இதுவே குற்றாலம் கோயிலின் தல தீர்த்தம். இங்கே ஈரக்காற்று அடிப்பதால் குற்றாலநாதர் தலைவலியால் சிரமப்படுகிறார் என்று பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கூறுகின்றனர். அதற்காக சுவாமிக்கு மூலிகை தைலம் தடவுவது (தைலக்காப்பு) உண்டு. 'வற்றாக் குளிரும் மாறாத் தலையிடியும்' என்ற பழமொழியால் இதை அறியலாம். இங்கு குறும்பலா மரத்தடியில் இறைவன் வீற்றிருக்கிறார். வேறெங்கும் இல்லாத சிறப்பாக இம்மரத்தின் மீது பாடப்பட்ட பத்துபாடல்கள் தேவாரத்தில் உள்ளன. வேதமே பலா மரமாக விளங்குவதாக தலபுராணம் கூறுகிறது. 'திருக்குறும்பலாபதிகம்' என்னும் பதிகத்தைப் பாடியவர் திருஞானசம்பந்தர். மலையும், இங்கிருக்கும் பலா மரங்களும், அதில் உள்ள பழங்களும், பழத்தின் கொட்டைகளும் சிவலிங்கமாகத் திகழ்வதாக தலபுராணம் சிறப்பிக்கிறது.






      Dinamalar
      Follow us