sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

கடவுளை அறிவது எப்படி?

/

கடவுளை அறிவது எப்படி?

கடவுளை அறிவது எப்படி?

கடவுளை அறிவது எப்படி?


ADDED : ஏப் 25, 2011 12:04 PM

Google News

ADDED : ஏப் 25, 2011 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் என்ன நோக்கத்துடன் ஒவ்வொரு ஜீவனையும் படைக்கிறார் என்பதை நம்மால் அறிய முடியாது, படைப்பின் ரகசியத்தை அவன் ஒருவனே அறிவான்.

* பிரார்த்தனை செய்யும் போது கண்களை மூடிக்கொள்வது, லட்சியத்தில் சிந்தனையை குவித்து வைப்பதற்கான ஓர் உதவியாகும்.

* ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வதைவிடக் கடவுளுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய அதிக தூய்மையான வழிபாடு வேறு எதுவும் இல்லை.

* கடவுளை அறிவால் அறிய முடியாது, நம்பிக்கை மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் தான் அறிய முடியும்.

* கடவுள் மனித இதயங்களைச் சோதனை செய்கிறார், அத்துடன் நம்மையும் நமது இதயங்களையும் நாம் அறிந்திருக்கும் அளவுக்கு மேல் அவர் அறிந்துள்ளார்.

* பிரார்த்தனை செய்யும்போது பக்தி சொற்கள் இல்லாவிட்டால் தவறில்லை. இதயத்தில் அன்பு மட்டும் இருந்தால் போதும்.

* நம்முடைய எண்ணங்களை இறைவன் அறிவார் என்பதை நாம் உணர்ந்துவிட்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைக்கிறது.

- காந்திஜி



Trending





      Dinamalar
      Follow us