
* வேகத்தால் சாதிப்பது ஒன்றும் இல்லை. தனது கடமையை நிதானமாகச் செய்வதால் மனிதன் நிறையத் தெரிந்து கொள்கிறான்.
* எதிரிக்கு நியாயம் வழங்குவதே அதிவிரைவில் தனக்கு நியாயம் பெறுவதற்கான வழி.
* நாணயம் என்பது வெறும் காசுபணம் அல்ல. உழைப்பு தான் நாணயம். உழைக்கச் சக்தி உடையவனே உண்மையில் செல்வந்தன்.
* நவீன நாகரிகம் இரவைப் பகலாகவும், மவுனத்தைப் பேரிரைச்சலாகவும் மாற்ற நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
* தானாக விரும்பித் தேவைகளைக் குறைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி இருக்கிறது. தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வது கூடாது.
* நற்செயல்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் பலன் அளித்தே தீரும் என்பது நம் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும்.
* நேர்மையாக வியாபாரம் செய்வது என்பது கடினம். ஆனால், அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை.
* கடவுளிடம் தளராத நம்பிக்கை கொண்டவன் மட்டுமே விரதத்தை தூய்மையுடன் கடைபிடிக்க முடியும்.
- காந்திஜி