sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நன்றி உள்ளவர் யார்

/

நன்றி உள்ளவர் யார்

நன்றி உள்ளவர் யார்

நன்றி உள்ளவர் யார்


ADDED : மார் 25, 2012 10:03 AM

Google News

ADDED : மார் 25, 2012 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்.

* இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே பார்க்கிறான்.

* உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்.

* பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய் மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கிறது... நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில்!

* இரு விஷயங்கள் ஒருவனிடமிருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான். 1. உலக வசதிகளைப் பொறுத்த வரையில் தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல், 2. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளுதல்.

-வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us