ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகத்தை திருத்த முயல வேண்டாம். முதலில் உன்னை நீயே திருத்திக் கொள்ள முயற்சி செய்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் பலனை தெய்வத்திடம் ஒப்படைத்து விடு. இதனால் பாவ, புண்ணியம் உன்னைத் தீண்டாது.
* மறந்தும் பிறருக்கு தீங்கு நினைக்காதே. இதனால், உனக்கு நீயே தீங்கு செய்து கொண்டவனாகிறாய்.
* தன்னை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான் மிக உயர்ந்த காணிக்கை.
* முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல, மனம் எப்போதும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
- சாந்தானந்தர்